Tuesday, August 7, 2018

மேலும் இருவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்

07 AUGUST 2018 -

திருகோணமலை - சம்பூர் பகுதியில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம்  இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு சம்பூர் - பாட்டாளிபுரம் பகுதியில் வைத்து ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment