31.10.2018
நாடாளுமன்றைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடாத்துவதற்கான பிரேரணையை சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
நாடாளுமன்றம் கூடியதும் புதிய அரசாங்கம் இதற்கான பிரேரணையை முன் வைக்கும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றது.
16ம் திகதி வரை நாடாளுமன்றம் கூட ஜனாதிபதி தடை விதித்துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சி இவ்வாறு தெரிவிக்கின்றமையும் தற்சமயம் 'பேரம்' நடந்து வருகின்ற நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment