Saturday, October 27, 2018

புதிய பிரதமர் நியமனம் சட்டரீதியானது – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்


October 28, 2018

புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கின்றதோ, அவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவருடன் இணைந்து புதிய அமைச்சரவையையும் அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

0 comments:

Post a Comment