29.10.2018
ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட இந்தோனேசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனோசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
மாயமான விமானம், ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அது கடலில் விழுந்துள்ளது என ஊடக பேச்சாளர் லதீப் யூசுப் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் 200 பயணிகள் இருந்தனர் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
0 comments:
Post a Comment