Wednesday, October 31, 2018

முச்சக்கரவண்டி பயணிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

31, 10. 2018

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து நாளை தொடக்கம் முச்சக்கரவண்டி பயணக்கட்டணத்தை சீர்த்திருத்தம் செய்யவுள்ளதாக சுயதொழில் பணியாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சம்மேளம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி , இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 5 ரூபாய் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment