28.10.2018
உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும், தேநீர் கோப்பை ஒன்றின் விலையை 5 ரூபாவினாலும் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இந்த விலை குறைப்பானது நாளை முதல் அமுலுக்கு என அந்த சங்கத்தின் இணைப்பாளர் அசேல சம்பத் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
இதேநேரம், கொத்து ரொட்டி மற்றும் .ப்ரைட் ரைஸ் பொதி ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
எனினும், பால் தேநீரின் விலை தற்போதைய நிலையிலேயே காணப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்தார்.
இந்த விலைக் குறைப்பை உணவக உரிமையாளர்கள் நடைமுறைப்படுத்துகின்றார்களா எனபது குறித்து ஆராயப்படும் என்றும் அதனை நடைமுறைப்படுத்தாத உணவக உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அசேல சம்பத் கூறியுள்ளார்.
இதேவேளை எரிபொருள் சூத்திரத்தை நீக்கி எரிபொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால், முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் என இலங்கை சுயதொழில் புரிவோருக்கான தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் தமது உற்பத்திகளுக்கு விலை குறைப்பு செய்வது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment