Monday, October 29, 2018

கொழும்பில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்….!

29.10.2018

நாளை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற அரசியலில் முன்னாள் ஜனாதிபதி பிரதமராக இன்று பதவி ஏற்கும் நிலையில் அதற்கு எதிராக நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இந்த மாபெரும் போராட்டம் நாளை மதியம் 12.30 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment