Tuesday, October 30, 2018

சகோதரியின் கணவரை படுகொலைசெய்த, சகோதரர்கள் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இஸ்ஸடீன் மரணதண்டனை தீர்ப்பு வழங்கினார்…!

30.10.2018

சகோதரர்கள் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சகோதரியின் கணவரை படுகொலைசெய்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடைபெற்றுவந்த விசாரணையின் கீழ் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன் இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கினார்.

2005 ஆம் ஆண்டு 10 மாதம் 29 ஆம் திகதி களுவாஞ்சிகுடி வயல் பகுதியில் மயில்வாகனம் வடிவேல் என்பவர் கடுமையானமுறையில் தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர்களான தெய்வநாயகம் மகேஸ்வரன், தெய்வநாயகம் மேகராசா ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலும் இருவரும் குற்றவாளிகள் எனக் கண்ட நீதிமன்றம் இருவருக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன் மரணதண்டனை வழங்கதி தீர்ப்பளித்தார்.

0 comments:

Post a Comment