01.11.2018
முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவை தனது முடிவுக்கு இணங்க வைக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
'
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் ஆளுமைக்குள் மீண்டும் சுதந்திரக் கட்சியை இழுத்துச் சென்று கையளிக்க அனுமதிக்க முடியாது என தெரிவிக்கின்ற துமிந்த, மஹிந்தவின் நியமனத்துக்கு ஆதரவு வழங்க மறுத்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு ஜனாதிபதியின் இல்லத்தில் துமிந்த - மைத்ரியிடையே நீண்ட நேர பேச்சு வார்த்தை இடம்பெற்றிருந்த போதிலும் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லையென அறியமுடிகிறது.
Sonakar News
0 comments:
Post a Comment