October 30, 2018
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இறக்குமதி தீர்வை வரி இல்லாமலா 200 வாகனங்கள் வெளியாக்கியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் 2016 ஒக்டோபர் 6 திகதி நிதி குற்றவியல் பிரிவு தமது விசாரணையை CRS/24/2016 நீதிபதியின் ஆலோசனைகளுக்காக அனுப்பியுள்ளது. இதற்கமைய நிதி குற்றவியல் பிரிவு 2720/16 கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த பின்னணியில் நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
0 comments:
Post a Comment