Tuesday, October 30, 2018

புதிய பிரதமரின் சகோதரர் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

October 30, 2018

அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் யாப்பினை மீறும் வகையில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சித் திட்டங்களுக்கு குறித்த இருவருமே தலைமை வகிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டினதும் அரசியல் யாப்பினை மீறிச் செயற்படும் அமெரிக்க நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியவர்கள் விரைவில் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Daily Ceylon

0 comments:

Post a Comment