Saturday, October 27, 2018

மைத்திரியால் ரணிலுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு: பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றம்!

28.10.2018

அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியுள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக சேவையில் இருந்து மீளப்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சாதாரண பாதுகாப்பை மாத்திரமே வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அலரி மாளிகையிலிருந்து இன்று மாலை நான்கு மணிக்கு முன்னதாக வெளியேறும்படி ஜனாதிபதி தரப்பிலிருந்து, ரணிலிற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அரசியலமைப்பின்படி தொடர்ந்தும் தானே பிரதமராக இருப்பதாக ரணில் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தரப்பிற்குமிடையிலான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில் மைத்திரி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

0 comments:

Post a Comment