October 29, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் நியமனத்தையடுத்து அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையின் அமைச்சுக்கள் வழங்கும் நிகழ்வு இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 புதிய அமைச்சர்களும், ஒரு பிரதி அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் அமைக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment