Monday, October 29, 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது


29.10.2018

தெமடகொட பெற்றோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் , காவற்துறை அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் முன்னாள் பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் நுழைய முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் , அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் , முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவை கைது செய்யுமாறு வலியுறுத்தி பெற்றோலிய வள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment