Wednesday, October 31, 2018

மீண்டும் ரணில் பிரதமரானால் மறுகனமே நான் பதவி விலகுவேன்- ஜனாதிபதி

October 31, 2018

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக்கினால் தான் ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு மணி நேரம் கூட இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (31) அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
தான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டு கடுமையான  தீர்மானங்களை முன்னெடுத்ததாகவும், இப்போது எடுத்துள்ள தீர்மானம் அதனை விடவும் கடுமையானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவுமே நான் இந்த தீர்மானங்களை எடுத்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment