Saturday, October 27, 2018

இன்றிரவு அவசர கூட்டம்;ஜனாதிபதி அழைப்பு

October 27, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர கூட்டமொன்றை நடத்தவுள்ளார்.

இன்றிரவு ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 7.30 மணிக்கு விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹண ரக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

0 comments:

Post a Comment