29.10.2018
சட்டம் மற்றும் ஒழுங்கினை உறுதிசெய்ய நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகளை உறுதி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இரா சம்பந்தன் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment