Monday, October 29, 2018

மஹிந்த மீதுள்ள நம்பிக்கையால் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு


October 29, 2018

இன்று (29) முதல் சிற்றூண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத தெரண செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று முதல் உணவுப்பொதி ஒன்றிற்கான விலை 10 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது.

கொத்து மற்றும் ப்ரைய்ட் ரைஸ் ஆகியவற்றின் விலையும் 10 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது.

அத்துடன் பிளேன் டீ ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தின் போது வரி அறவிட்டு மக்களை சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் எதிர்காலத்தில் அத்தியவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கும் எனும் நம்பிக்கையில் இந்த தீர்மானத்தை எடுத்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி
தெரண

0 comments:

Post a Comment