October 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பொறுப்பாளர் நாமல் குமார தெரிவித்தார்.
ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு இலத்திரனியல் ஊடகம் ஊடாக தான் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதற்கான அனுமதி கிடைத்தவுடன் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளதாகவும் இன்று அவர் தனியார் ஊடகமொன்றிடம் கூறினார்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால், தனது பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் என்பன குறித்து பொது மக்களிடம் அறிவிக்க விரும்புவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணையின் போது தான் நீதிமன்றத்தில் இரகசிய தகவலொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment