Tuesday, October 30, 2018

நாடாளுமன்றம் கூட்டப்படுமா? மகிந்த அமரவீர சபாநாயகருக்கு அவசர கடிதம்!!


30 10, 2018

இலங்கை நாடாளுமன்றத்தினுள் பிரதமர் பதவிக்கு கிடைக்கக்கூடிய அனைத்து உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு பெற்றுகொடுக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மகிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் , மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்றுள்ளமை சபாநாயகர் அறிந்த விடயமே என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment