Tuesday, October 30, 2018

அலரி மாளிகையை ஜனநாயகத்தின் சின்னமாக மாற்றியுள்ளோம் – ரணில்

October 30, 2018

அலரி மாளிகையை ஜனநாயகத்தின் சின்னமாக மாற்றியுள்ளோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் கொள்ளுப்பிட்டியில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேரணியில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.

மக்களின் ஆணைக்கும் நம்பிக்கைக்கும் துரோகமிழைப்பது வெறுக்கத்தக்க செயல், அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

துரதிஸ்டவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பாராத தருணத்தில் இந்த ஆணையை மீறினார், பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தி விட்டு தனது கரங்களிற்கு அதிகாரத்தை எடுக்க முயன்றுள்ளார், எனினும் நாங்கள் இதனை அனுமதிக்கப்போவதில்லை என தீர்மானித்தோம், எனவும் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க நாங்கள் அலரி மாளிகையை ஜனநாயகத்தின் சின்னமாக மாற்றியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment