Tuesday, October 30, 2018

ஜனாதிபதி – சபாநாயகர் இடையே இன்று முக்கிய சந்திப்பு

October 31, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் இன்று (31) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து இதன்போது சபாநாயகர் ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பாராளுமன்றை ஒத்திவைத்துள்ளமை சட்டரீதியானது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் குறிப்பிட்டனர்.

எனினும் பாராளுமன்றை விரைவில் கூட்டுவது தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசுவதாக சபாநாயகர் இதன்போது உறுதியளித்துள்ளார். அதேவேளை பாராளுமன்றை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்குச் சபாநாயகர் கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment