Sunday, October 28, 2018

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

October 29, 2018

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதான அரச ஊடக நிறுவனகளுக்கு மூன்று பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமங்களை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சட்டத்தரணி சரத் கொன்கஹகே, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்க மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக வசந்த பிரிய ராமநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment