October 30, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைக் கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து இதன்போது பேசப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment