Tuesday, October 30, 2018

புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பு

30.10.2018

கடந்த அரசாங்கத்தில் நிலவிய பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, புதிய பிரதமரை தாம் நியமித்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை ஜனாதிபதி நேற்று சந்தித்திருந்தார்.

இதன்போது இந்த விளக்கமளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஜனாதிபதியை கோரினர்.

எவ்வாறாயினும் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள முறைமை, தமக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் யாப்பினை மீறாமல் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி அவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment