2018-10-29
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கிறார். இதே வேளை தேசிய ஏர்பூட்டு விழா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திஸ்ஸமஹராமவில் நடைபெறுகிறது.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இதில் பங்கேற்க இருப்பதோடு பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பங்கேற்கும் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு இதுவாகும்.
இதே வேளை புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவி ஏற்க இருப்பதோடு அமைச்சரவை 30 ற்கு மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பதவிகள் யார் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கூடி ஆராய்ந்து தீர்மானித்துள்ளதாக அறிய வருகிறது.
0 comments:
Post a Comment