Tuesday, October 30, 2018

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நசீர்…!

30.10.2018

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரான  ஏ.எல்.எம். நஸீர் அவர்கள்  மஹிந்த அணியுடன் இணைந்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லையென சற்று முன் அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வரும் ஆட்சி மாற்றத்துடன் கௌரவ. ஏ.எல்.எம் நசீர் அவர்கள் மஹிந்த தரப்புடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் ” ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடைய தலைமையின் முடிவே எனது முடிவுமாகும். எமது சமூகத்தின் பல்வேறு சிக்கல்களை அவிழ்க்க வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது. நாம் மக்களின் பிரதி நிதிகளாகவே இங்கே இருக்கின்றோம். அவர்களின் ஆணையினைக் கொண்டே நாம் முடிவெடுப்போம்.

மேலும் முஸ்லீம்களின் காணி அதிகாரங்கள் விஷேடமாக வட்டமடு, கிரன்கோமாரி, பொத்துவில், அஷ்ரப் நகர், நுரைச்சோலை, மாயக்கள்ளி போன்ற பிரச்சனைகளையும், ஒலுவில் மக்களின் பிரச்சனைகள், மீனவர்களின் பிரச்சனைகள் போன்றவற்றையும் நாம் இலங்கையின் ஒரே ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறைக்கு ஒரு முஸ்லீம் அரச அதிபர் என்பதையும், கரையோர மாவட்டம், தேர்தல் முறைமை மாற்றம், மாகாண சபை எல்லை நிர்ணயம் போன்றவற்றிற்குமான தீர்வுகளை சாதகமாக தீர்க்கக் கூடிய தலைமை ஒன்றினை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.

எமது தலைமை ஏனையவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நமது சமூகத்தின் தேவைகளையே இலக்காக கொண்டு செயற்படுகிறது என்பதையும்  நாம் இவ்விடத்தில் குறிப்பிடுகிறோம்”. எனவும்  குறிப்பிட்டார்.

(ஊடகப்பிரிவு )




0 comments:

Post a Comment