29.10.2018
கண்டியில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் கடந்த ஏழு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகாசோன் இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கண்டி – மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அமித் வீரசிங்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த மனுவை ஆராய்ந்ததன் பின்னர் நீதவான் குசலா சரோஜினி வீரவர்தன இந்த பிணை உத்தரவை வழங்கியதாக சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த குழப்ப நிலையை அடுத்து, 280 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Hirunews
0 comments:
Post a Comment