Friday, September 14, 2018

கோட்டாபய போட்டியிட்டால் கட்டுப்பணம் என்னுடையது- பொன்சேகா

September 14, 2018

மஹிந்த குடும்பத்தில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாக இருந்தால், அவருக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை தானே கட்டுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வருவார் எனத் தெரிவித்திருந்தமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், தங்களது கட்சி அவருடன் போட்டியிட தயாரா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு,
தமது கட்சியின் தலைவர் பொருத்தமான ஒருவரை வேட்பாளராக நிறுத்துவார் என்றிருந்தால், கோட்டாவை வெற்றி கொள்வது சிரமமானதல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment