10.09.2018
ஒன்றிணைந்த எதிரணியினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது, பொதி செய்யப்பட்ட விஷம் கலந்த பால் வழங்கப்பட்டதாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பிளனர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார உள்ளிட்டோரினால் மீரிஹான காவல் நிலையத்தில் இன்று இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் முன்னிலைப்படுத்துமாறு குறித்த முறைப்பாட்டின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரியுள்ளனர்.
0 comments:
Post a Comment