Tuesday, September 11, 2018

பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

11.09.2018

டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பஸ் கட்டணம்  10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என, அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 12.5 சதவீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர், டீசல் விலை 14 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் என, சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக, நாளைய தினம் (12), அரசாங்கத்துக்கு மூன்று தினங்கள் வழங்கப்படும் எனவும், அதற்குள் அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி  பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment