Sunday, June 10, 2018

11 மணித்தியால சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது- பொலிஸ்


June 10, 2018

நாடு முழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் இன்று (10) காலை 8.00 மணி வரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 17687  பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுள் 998 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும், 1090 பேர் பல்வேறுபட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது 9 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 648 பேரும் இதில் அடங்குவதாகவும் பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாதாள உலக குழுக்களின் செயற்பாட்டைத் தடுத்தல் மற்றும் குற்றச் செயல்களை மட்டுப்படுத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அப்பிரிவு மேலும் கூறியுள்ளது. 

0 comments:

Post a Comment