Wednesday, June 27, 2018

நான்கு மணி நேர திடீர் சுற்றிவளைப்பு 2332 பேர் கைது – பொலிஸ்

June 27, 2018

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2332 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையும் ஒரு கட்டமாகவும்,  இன்று அதிகாலை 3.00 மணிமுதல் காலை 5.00 மணிவரை இரண்டாம் கட்டமாகவும் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள்  423 பேர் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜசுந்தரவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்ட இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வாகன போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக 5254 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.  

0 comments:

Post a Comment