Wednesday, June 27, 2018

நான் சிறைக்குச்சொல்ல இரண்டு முக்கிய அமைச்சர்கள்: ஞானசார தேரர் சீற்றம்!


  June 27, 2018 


தாம் சிறைப்படுத்தப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்கள் இருவர் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டின் பிராதன அரசியல் கட்சி ஒன்றின் தலைவரும், அவருக்கு நெருக்கமான இரண்டு அமைச்சர்களும் நான் சிறைவைக்கப்பட்டதன் பின்னணியில் உள்ளனர்.

இரண்டு முக்கிய அமைச்சர்களும், அவர்களுக்கு மேலே உள்ள ஒருவரும் எனக்கு 6 மாதங்களுக்கு அரை காற்சட்டை அணிவிப்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தாக நம்பத்தகுந்த தகவல்கள் எனக்கு கிடைத்த போதும் நான் அதனை நம்பியிருக்கவில்லை.

இதேநேரம், என்னை சிறைப்படுத்தவும், அரை காற்சட்டை அணிவிக்கவும் கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் பல வருடங்களாக சில சக்திகள் செயற்பட்டன.

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் இணைந்த காவி உடைக்கு இந்த துரோகத்தை செய்துள்ளனர். இந்த நிலையில், நான் சிறைவைக்கப்பட்டமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீதிமன்றத்திற்கு தமது கடமையை சுயாதீனமாக நிறைவேற்ற இடமளிக்கப்படவில்லை என்றும் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment