, 25 JUNE 2018
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட 4 பேரும் இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் மற்றும் தர்மபுரம் பகுதிகளை சேர்ந்த 22 முதல் 26 வயதான இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏலவே இருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment