Monday, June 25, 2018

பிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம்


25.06.2018

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி மட்டக்களப்பு நகரில் உள்ளுராட்சி உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்று காலை முதல் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பி.பிரசாந்தனின் தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment