30.06.2018
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு காரணமாக, தேநீர் கோப்பை ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விலைக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கும் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை முதல் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment