25 JUNE 2018
மாத்தறையில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மாநில் ரோஹன எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர், பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான மாகந்துரே மதுஷின் தென் பிராந்தியத்துக்கான பிரதான உதவியாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
HiruNews
0 comments:
Post a Comment