Friday, June 29, 2018

நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது


நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாத என சுட்டிக்காட்டியுள்ளது.

இல்லாத ஓர் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்யும் பவுசர் சாரதிகளினால் மேற்கொள்ளப்பட உள்ள தொழிற்சங்கப் போராட்டத்தினால் எரிபொருள் விநியோகத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போலிப் பிரச்சாரங்களைச் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment