, 25 JUNE 2018
சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியுள்ளார்.
தங்காலை – வீரகெட்டிய பகுதியில் அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்க நிதி முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் கைது செய்வதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
HiruNews
0 comments:
Post a Comment