, 27 JUNE 2018
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் தாம் தெரிவித்த கருத்து, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலேயே என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் இயலாதுள்ளது.
எனவே அவரை அழைத்து வருவதை தாம் மேற்கொள்வதாக தெரிவித்த கருத்து அரசாங்கத்திற்கு உதவும் நோக்கிலேயே தெரிவிக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment