Thursday, June 28, 2018

உளவாளிக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது- ரியர் அட்மிரால் சரத்

June 29, 2018

ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில்  விடுதலைப் புலிகளின் சீருடைகள், கிளேமோர் குண்டு உட்பட ஆயுதங்கள் பலவற்றை மீட்பதற்கு காரணமாக இருந்த பிரதான உளவாளி யார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பாகும் எனவும்    ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றிய தினேஷ் என்பவர்  ஆவார்.

இராணுவத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு விடுதலைப் புலிகளின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கான உளவாளிகள் அந்த இயக்கத்திற்கு உள்ளே இன்னும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில் தகவல் வழங்கிய இந்த உளவாளி தொடர்பில் யாழ். ஊடகமொன்று தகவல் வழங்கியுள்ளமை ஒர் உளவாளிக்கு இழைத்துள்ள துரோகம் ஆகும். இவர் கைது செய்யப்படலாம். பின்னர் விடுதலையானவுடன் இவரை புலிகள் கொலை செய்து விடுவார்கள் எனவும்  ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.  

நன்றி
Daily Ceylon

0 comments:

Post a Comment