Thursday, June 28, 2018

பாதிக்கப்பட்ட அதிபருக்கு நட்ட ஈடு வழங்க பேசல ஜயரத்னவுக்கு உத்தரவு

June 28, 2018 

நிவத்தக சேத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றிய சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்னவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அதிபருக்கு, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன 250,000 ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட அதிபருக்கு அரசாங்கமும் 50,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அநீதியான முறையில் குறித்த அதிபரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் திகதி தமது பாடசாலையில் நடந்த நிகழ்வொன்றை ஒழுங்காக ஏற்பாடு செய்திருக்கவில்லை என்று குற்றம் சுமத்தி முன்னாள் முதலமைச்சர் தன்னை அநீதியான முறையில் இடமாற்றியதாக பாதிக்கப்பட்ட அதிபர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment