.கத்தாரில் வாகனங்களை உடைத்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் அதிரடிக் கைது!
July, 01.2018
கத்தாரில் வாகனங்களை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை திருடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 3 ஆபிரிக்க நாட்டவர்கள் அங்கிய கும்பல் ஒன்றை கத்தார் குற்றப் புலனாய்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாட்டின் பல்வேற பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் இவர்கள் தொடர்புபட்டவர்கள் என்பதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
July, 01.2018
கத்தாரில் வாகனங்களை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை திருடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 3 ஆபிரிக்க நாட்டவர்கள் அங்கிய கும்பல் ஒன்றை கத்தார் குற்றப் புலனாய்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாட்டின் பல்வேற பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் இவர்கள் தொடர்புபட்டவர்கள் என்பதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாகன உரிமையாளர்கள், வாகனங்களை பார்க் செய்து விட்டு செல்லும் போது ஒழுங்கான முறையில் முடிவிட்டு செல்லும் படியும், வாகனங்களின் உள்ளே பெறுமதியான பொருட்களை வைக்க வேண்டாம் என்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் உடனே 999 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment