Thursday, June 28, 2018

வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1330 பேர் உயிரிழந்ததாகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1439 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு பிரதிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.டீ.ஏ. தனஞ்சய தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீதி விபத்துக்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விஷேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் விஷேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment