Tuesday, June 26, 2018

மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது !


June 26, 2018
 

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை – சுழிபுரத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதால் சுவாசம் தடைப்பட்டு அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை கொலை செய்யும் நோக்குடனேயே கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டுள்ளதென என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று, சுழிபுரம் - காட்டுபுலம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Battinews

0 comments:

Post a Comment