Saturday, June 30, 2018

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த நபரது மோசமான செயல் ! திருகோணமலையில் பிடிபட்ட சம்பவம் !


, June 30, 2018
 

இத்தியோப்பியா நாட்டிலிருந்து கப்பல் மூலம் வந்த பொதியொன்றினை சோதனையிட்ட போது 16 கிலோ 100 கிராம் கெதீன் என்றழைக்கப்படும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு கல்லடி பகுதியைச்சேர்ந்த பீ.நிஷாந்தன் (36வயது) என்பவர் எனவும் தெரியவருகின்றது.சம்பவம் குறித்து தெரியவருவதாவது இத்தியோப்பியா நாட்டிலிருந்து திருகோணமலைக்கு கப்பல் மூலம் பொதியொன்று வந்துள்ளது.

அப்பொதியினை எடுத்துச்செல்வதற்காக வருகை தந்தவரிடம் பொதியில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை சோதயிட உதவி செய்யுமாறும் சுங்க அதிகாரிகள் கோரியிருந்தனர்.இதனையடுத்து சோதனையிட்ட போது கெதீன் என்றழைக்கப்டும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அதனையடுத்து திருகோணமலை பொலிஸாரிடம் போதைப்பொருட்களுடன் சந்தேக நபரை ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துறைமுகப்பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment