30.06.2018
மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆவணத்தில் கைச்சாத்திட விருப்பம் வெளியிட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டி – கட்டுக்கலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணத்தில் கைச்சாத்திட ஏனைய அரசியல் கட்சிகள் உரிய பதிலை வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையின் போது மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கான யோசனையையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே முன்வைத்ததாகவும் அதன் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment