June.26.2018
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் சம்பந்தமாக இன்று (26) காலை விஷேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற உள்ளதாக தபால் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
தேசிய சம்பள ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித தீர்மானமும் இன்றி முடிவடைந்ததாக அந்த சங்கம் கூறியுள்ளது.
அதன்படி தொழிற்சங்க போராட்டத்தை இன்று முதல் மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறினார்.
இதேவேளை தாம் பணியாற்றும் அலுவலகத்திற்கு பணிக்கு செல்ல முடியாத பணியார்கள் அருகில் உள்ள தபால் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு செல்லுமாறு தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.
அவ்வாறு பணிக்கு செல்வோருக்கு போக்குவரத்து வசதி மற்றும் தேவையான ஏனைய வசதிகளை செய்து கொடுக்குமாறு அனைத்து மாகாண பிரதி தபால் மா அதிபர்கள் மற்றும் பிரதேச தபால் அத்தியட்சகர்களுக்கு அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தபால் மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment