Friday, June 29, 2018

மகிந்த ராஜபக்ச, சந்திக்க விரும்பாத பெண்


June 29, 2018 

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆய்வு கட்டுரையை வெளியிட்ட ஊடகவியலாளர் மாரியா அபி ஹபீப், தனது கட்டுரையை எழுதுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து தனக்கு கிடைத்த தகவல்களை உறுதிப்படுத்த பல முறை முயற்சித்து போதும், மகிந்த சந்திப்புகளை தவிர்த்துக்கொண்டதாக தெரியவருகிறது.

ஊடகவியலாளர் மாரியா அபி ஹபீப்பிடம் ஊடகங்கள் வினவிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 10 கேள்விகளை அனுப்பி வைத்து இரண்டு மாதங்கள் பதிலுக்காக காத்திருந்த போதிலும் மகிந்தவிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்திக்க முயற்சித்ததாகவும், அதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மாரியா கூறியுள்ளதுடன், தனக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் மாத்திரமே பதிலளிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Jaffna muslim

0 comments:

Post a Comment